ஊடகவியல் கருத்தரங்கு - ப.விஜயகாந்தன்

சஜீ ஊடகவியல் கல்வியகத்தால் பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் 02.11.2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஊடகவியல் தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது
.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த ஏழு பாடசாலைகளிலிருந்து 156 மாணவர்களும்  10 ஆசிரியர்களும் பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர். பெற்றோசோ பாடசாலையின் சார்பாக தரம் 9,10,11 ஆகிய வகுப்புக்களை சேர்ந்த 46 மாணவர்கள் பங்குபற்றினர்.

இக்கருத்தரங்கினை இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இந்திரஜித் தலைமையேற்று நடாத்தியதோடு மாணவர்களுக்கு பயன்மிகுந்த வகையில் ஊடகவியல் தொடர்பான விரிவுரையினையுயம் பல செயன்முறைப்பயிற்சிகளையும் வழங்கினார். மாணவர்கள் தம்மை ஊடகவியலாளராக பாவனை செய்துக்கொண்டு செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு, செய்தி முன்வைப்பு என்பனவற்றை நிகழ்த்தியதோடு வானொலி மற்றும் தொலைகாட்சி மாதிரியிலான நிகழ்ச்சிகளை நடாத்தி காட்டினர். கருத்தரங்கின் இறுதியில் மாணவர்களுக்கு பங்குபற்றுனர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.